அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிய தெய்வத்திரு செ.செல்வமோகன் (த.கா.165 / S.No. 5343) அவர்கள் திடீரென மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரின் குடும்பத்துக்கு “உதவும் கரங்கள் 2003” குழு சார்பாக ரூ.28,04,500/- நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பணித் தொகை 5609 நபர்கள் வழங்கிய ரூ.500 பங்களிப்பின் மூலம் திரட்டப்பட்டது.
குடும்பத்தினரின் விவரங்கள்:
திருமதி சாவித்திரி (மனைவி) – வயது 39
செ. விக்னேஷ்வரன் (மகன்) – வயது 13
செ. சண்முகேஸ்வரன் (மகன்) – வயது 4
திரு. செல்வராஜ் (தந்தை) – வயது 67
நிதி உதவியின் விபரம்:
திருமதி சாவித்திரி பெயரில் ₹5,00,000/- HDFC வங்கியில் 5 வருடங்களுக்கு நிரந்தர வைப்பாக செலுத்தப்பட்டுள்ளது. வருடத்திற்கு மூன்று முறை வட்டி வழங்கப்படும் (தோராயமாக ₹7,582/- பெற முடியும்).

செ. விக்னேஷ்வரன் பெயரில் ₹11,00,000/- 10 வருடங்களுக்கு நிரந்தர வைப்பீடு. வட்டி விகிதம் 6.15%. முடிவில் பெறப்படும் தொகை ரூ.20,25,125/-.
செ. சண்முகேஸ்வரன் பெயரில் ₹10,00,000/- 10 வருடங்களுக்கு நிரந்தர வைப்பீடு. முடிவில் பெறப்படும் தொகை ரூ.18,41,022/-.
குடும்பத்திற்குத் தேவையான மருத்துவ பாதுகாப்புக்காக Aditya Birla Capital Health Insurance நிறுவத்தில் ₹15,871 செலவில் ₹5 இலட்சம் மதிப்பில் காப்பீட்டு திட்டம் எடுக்கப்பட்டுள்ளது.
திரு. செல்வராஜ் (தந்தை) அவர்களுக்கு ₹1,00,000/- ரொக்கமாக வழங்கப்பட்டது. மேலும் ₹88,629/- ரூபாய் மொத்த நிதி மிச்சமாக அவரின் மனைவிக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவி வழங்கும் நிகழ்வின் மூலம் “உதவும் கரங்கள் 2003” குழுவின் தொண்டு மற்றும் ஒற்றுமை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டாகிறது.