திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்கள், வாகன விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கவும், கண்காணிக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, திண்டுக்கல் நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் கண்காணிப்பு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்மையில், பழுதடைந்த கேமராக்கள் திண்டுக்கல் மாவட்ட வர்த்தகர் சங்கத்தின் உதவியுடன் 210 கேமராக்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டன. மேலும், காவல் கட்டுப்பாட்டு அறையில் 18 புதிய கண்காணிப்பு தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்க இரு காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நவீன கட்டுப்பாட்டு அறையை (23.12.24) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் A. பிரதீப், இ.கா.ப., திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. சிபின், இ.கா.ப., காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த அமைப்பின் மூலம், நகரில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள், விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை துரிதமாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், முக்கிய பண்டிகை நாட்களில் நகரை முழுமையாகக் கண்காணித்து, அவசர உதவிகளுக்கு காவலர்கள் உடனடி சேவை செய்யும் வகையில் இதன் பயன் மேலோங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.