நாகப்பட்டினம் மாவட்டம், பெருங்கடம்பனுர் வைரவனிருப்பை சேர்ந்த திரு.சுரேஷ் குமார்(39) த/பெ தெட்சிணாமுர்த்தி என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் 21.08.2023 அன்று தனது ஆட்டோவில் பயணித்த நாகை வண்டிப்பேட்டையை சேர்ந்த நகராட்சி ஊழியர் ராஜலெட்சுமி க/பெ வரதராஜன் என்பவர் தவறவிட்ட smart mobile,ID card, bank passbook போன்றவற்றை மீட்டு நாகை மாவட்ட காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இவரின் இந்த நற்செயலை பாராட்டும் விதமாகவும் இவரை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையிலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டியதுடன் சால்வை அணிவித்து கௌரவித்தார்கள். பின்பு பொருட்களை தவறவிட்டவரின் உறவினரை நேரில் அழைத்து ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் குமார் மூலம் மாவட்ட காவல் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
