ஜாய் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய சைபர் குற்றத் தடுப்பு நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் அவர்களின் உத்தரவின்பேரில், ஜாய் பல்கலைக்கழகத்தில் மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி, டிஜிட்டல் போஸ்டர் கிரியேஷன் மற்றும் க்விஜ் போட்டிகள் சைபர் கிரைம் காவல்துறையினால் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) பாலச்சந்திரன் பரிசுகளை வழங்கினர். மேலும், சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேலும், காவல்கிணறு காவல் சோதனைச் சாவடியில் இருந்து சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் கொடியசைத்து தொடங்கினார். சுமார் 500 மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமளவில் பங்கேற்றனர். அவர்கள் சைபர் கிரைம் விழிப்புணர்வு சம்பந்தமான பதாகைகளை கையில் ஏந்தி, காவல்கிணறு செக்போஸ்டில் இருந்து தொடங்கி, காவல்கிணறு பஜார் மற்றும் முக்கிய சாலைகள் வழியாக சென்று, வடக்கன்குளம் ரயில்வே கேட் அருகே விழிப்புணர்வு பேரணியாக முடிவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது, மேலும் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை ஊகப்படுத்தியது.



இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ரமா, உதவி காவல் ஆய்வாளர் ராஜரத்தினம், காவல் உதவி ஆய்வாளர் தொழில்நுட்பம் மோகன் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தனர்.