கேரள மாநில காவல்துறை ஏற்பாட்டில், 1-வது அகில இந்திய காவல் இறகுபந்து குழு சாம்பியன்ஷிப் 2024–25 போட்டிகள் ஏப்ரல் 11 முதல் 15 வரை கொச்சியில் உள்ள ரீஜினல் ஸ்போர்ட்ஸ் சென்டர், ராஜீவ் காந்தி इंडோர் ஸ்டேடியத்தில் சிறப்பாக நடைபெற்றன.

தமிழக காவல்துறை சார்பில் 5 IPS அதிகாரிகள் மற்றும் 32 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என மொத்தம் 37 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். இந்த போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றன.

மேஜை பந்து (Table Tennis) கலப்பு இரட்டையர் பிரிவில் வினித்தேவ் வாங்கடே, காவல்துறை இயக்குநர் மற்றும் S. ராஜேஸ்வரி, காவல்துறை தலைவர், TNUSRB ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

S. ராஜேஸ்வரி, மேஜை பந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் தனிநபர் பிரிவில் 1 வெண்கலப் பதக்கத்தையும் பெற்றார்.

N. ஹேமமாலா, காவல் ஆய்வாளர், மதுரை மாநகரம் – இறகுபந்து தனிநபர் பிரிவில் 1 தங்கம், இரட்டையர் பிரிவில் 1 வெள்ளி, 1 வெண்கலம்.
N. ஜானகி, காவல் ஆய்வாளர், SBCID, சென்னை – இரட்டையர் பிரிவில் 1 வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் 1 வெண்கலம்.
K. ராஜேஷ், காவல் ஆய்வாளர், IS-GCP, சென்னை – மேஜை பந்து போட்டியில் 2 வெள்ளி.
A. பிரசன்னா வெங்கடேஷ், ஆய்வாளர், V&AC, திருச்சி – இறகுபந்து போட்டியில் 1 வெண்கலம்.
S. ராமசாமி, சார்பு ஆய்வாளர், மதுரை – இறகுபந்து போட்டியில் 1 வெள்ளி.
R. ST, தலைமை காவலர், CBCID, சென்னை – மேஜை பந்து போட்டியில் 1 வெள்ளி, 1 வெண்கலம்.
S. மைதிலி, தலைமை காவலர், ஆவடி – மேஜை பந்து போட்டியில் 1 வெண்கலம்.

மொத்தமாக, தமிழக காவல்துறை 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்று மாநிலத்திற்கும் காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது.

போட்டிகளில் சாதனை படைத்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்களும் வெகுமதிகளும் வழங்கி கௌரவித்தார்.