நெடுஞ்சாலையில் விபத்துகள் நடக்கா வண்ணம் காக்கும் பொருட்டு ஆய்வு செய்த
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப மற்றும் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ். பெரம்பலூர் மாவட்டநெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர்.கிள்ளிவளவன் அவர்கள் பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலையில் விபத்துகள் நடக்கா வண்ணம் தடுக்க அனுதினமும் பல்வேறு முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த அந்த செயல்பாடுகளில் ஒன்றான கடந்த தினம் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான இடங்களில் (Red spot ) எனப்படும் விபத்துகள், வாகனங்கள் மற்றும் அதிக இடையூறு நெருக்கடி இடங்களை ஆய்வு செய்து சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களை தேர்வு செய்து அந்த ஒவ்வொரு இடத்திற்கும் தேவையான மின்விளக்குகள், சர்வீஸ் ரோடுகள் , சப்வேயிகள் , ஒளி மினிகிகள் ,ரோடு லைன்கள் , நெடுஞ்சாலையில் இருந்து பிரிவு சாலைகளுக்கான தடுப்பனைகள், வேக கட்டுப்பாடு கருவிகள் என பல்வேறு தொகுப்புகளை அடக்கிய ஒரு சுற்றறிக்கையை தயார் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண் பார்வைக்கு எடுத்துச் செல்கிறார் .


இதனை கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக திருச்சி -சென்னை நெடுஞ்சாலை இடத்தை ஆய்வு செய்து அந்த இடத்திற்கு தேவையான செயல்பாடுகளை செய்வதற்கு தாசில்தார், திட்ட இயக்குனர் வட்டாட்சியர் , அதிகாரி அரசு அதிகாரிகள் முன்னிலையில் இன்று காலை ஆய்வுகள் மேற்கொண்டனர் பெரம்பலூர் மாவட்டம் மக்களின் உயிர் காக்கும் முன்னெச்சரிக்கை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்டு பொதுமக்கள் பூரிப்படுகின்றனர்.
இதே போல் கடந்த மாதங்களில் அரியலூர் -பெரம்பலூர் சாலையை ஒழுங்கு படுத்துவதற்கான கோப்புகளை தயாரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் சமர்ப்பித்தத்தில் அவர்கள் அந்த கோப்புகளை ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து சாலையை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளையும் இறுதி கட்ட நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றன .