திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டம், வடசென்னை பதிவு மாவட்டம், கொன்னூர் சார் பதிவகம், முகப்பேர் கிராமத்தில் அமைந்துள்ள புறம்போக்கு நிலம் (சர்வே எண்: 99/3) தொடர்பாக பெரிய நில மோசடி ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் மோசடி!
முன்னதாக, 1665 சதுர அடிகள் கொண்ட மனை எண். 14 மற்றும் 15 ஆகியவற்றை சாந்தா மற்றும் அவரது காலஞ்சென்ற கணவர் லேட். பிச்சமுத்து ஆகியோர் போலி பட்டா மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 20.09.2016 அன்று, குறித்த நிலத்தை விற்கும் விதமாக அவர்கள் ரூ. 15 லட்சம் பணத்தை பெற்று, முறையான கிரையம் ஒப்பந்தம் மேற்கொண்டு, பட்டா தொடர்பான விவரங்களை உறுதி செய்து கூறியிருந்தனர்.
முகவரி – பட்டா கிடைக்காமல் காலம் தாழ்த்தி வந்த குற்றவாளிகள்
ஆனால், விற்பனை ஒப்பந்தம் நடந்த பின்னரும், பட்டா மற்றும் உரிமைச் சான்றுகளைப் பெற்று வழங்குவதாக கூறிய சாந்தா, பல ஆண்டுகளாக இதை இழுத்தடித்து வந்துள்ளார். பணத்தை திருப்பிக் கேட்கும் போது, “கூடிய விரைவில் பட்டா வழங்கப்படும்” என கூறி ஏமாற்றிவந்த நிலையில், இன்று வரை நில உரிமை தெளிவுபடுத்தப்படாமல் உள்ளது.


அதிகாரிகள் துஷ்பிரயோகமாக மிரட்டல் – நில அபகரிக்க உத்தரவு?
இந்நிலையில், அம்பத்தூர் சரக உதவி ஆணையர் பிராங்க் டி. ரூபன் மற்றும் T2 காவல் ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு) ஆகியோர், அரசு புறம்போக்கு நிலத்தை அபகரிக்க நினைக்கும் சில நபர்களுக்கு துணையாக செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இவர்களின் ஆதரவுடன், சில அரசியல்துறையினர் மற்றும் சமூக விரோதிகள், புறம்போக்கு நிலத்தை அபகரிக்க முயன்று, பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரரை மிரட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறு லட்சம் வாங்கி தருகிறோம் என்று உதவி ஆணையரும், ஆய்வாளரும் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்கள் ,சம்பந்தப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய முற்பட்டால் உடனே 20 நபர்கள் வந்து பிரச்சினை செய்கிறார்கள் 100 க்கு பலமுறை டயல் செய்தும் ஒரு முறை கூட காவல்துறையினர் வரவில்லை.

மிரட்டல், துன்புறுத்தல் – நியாயம் கேட்டு அலையும் பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர், தனது நில உரிமையை பாதுகாக்க பல்வேறு முறையில் நீதிக்காக போராடி வருகிறார்.
1. 21.03.2024 – ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
• பதிவு எண்: C.NO. 946/COP- AVADI/VISITORS/2024
2. 19.08.2024 – T-3 கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
• CSR NO. 1150/2024
3. 07.02.2025 – ஆவடி காவல் ஆணையரிடம் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.
ஆனால், இந்த அனைத்து முறையீடுகளும், அம்பத்தூர் சரக உதவி ஆணையர் பிராங்க் டி. ரூபன் மற்றும் T2 காவல் ஆய்வாளர் ஆகியோரால் மறுக்கப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கு எதுவும் தெரிவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மிரட்டல் – நிலத்தை அபகரிக்க முயலும் அதிகாரிகள்?
தற்போது, பாதிக்கப்பட்ட நபர், தனது உரிமையான நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, குறித்த அதிகாரிகளின் துணைப்பிரிவினர் கேட் அமைத்து பூட்டிவிட்டனர். இது, நில அபகரிப்பதற்காக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதற்கான உறுதியான ஆதாரமாக பார்க்கப்படுகிறது.

நில உரிமை தொடர்பான இந்த மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து உடனடியாக உயர் அதிகாரிகள், காவல் துறை, நீதிமன்றம் தலையிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
சட்டத்திற்கும் நீதிக்கும் எதிராக நடைபெறும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நில மோசடிகளை விரைவில் விசாரிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவரின் கோரிக்கையாக உள்ளது.