தமிழ்நாடு இணையக் குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் சந்தீப் மிட்டல், இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், இ.கா.ப. மற்றும் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் மனோகர், இ.கா.ப. அவர்களின் அறிவுரையின்படி, சென்னையில் உள்ள இணையக் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) விஜயராகவன் அவர்களின் தலைமையில், அரியலூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் 03.12.2024 அன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் 500க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இணையவழி குற்றங்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அதன் பின்னர், பெருகி வரும் சைபர் குற்றங்களான டிஜிட்டல் கைது மோசடி, TASK மோசடி, online trading மோசடி, online investments மோசடி, OTP மோசடி, KYC Update மோசடி, ஏதேனும் அரசு திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற பணம் செலுத்த வேண்டும் என்று கூறி பல்வேறு முறைகளில் மோசடி செய்யப்படும் நிகழ்வுகளைப் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான சமூகவலைதள குற்றங்களும், தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளும் எடுத்துரைக்கப்பட்டன.

இணையவழி மூலம் பணம் இழந்தால் உடனடியாக புகாரை பதிவு செய்ய வேண்டிய உதவி எண் 1930 மற்றும் இணையதளம் www.cybercrime.gov.in பற்றி விளக்கமளிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அரியலூர் அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள், முதல்வர் நாகராஜன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.