அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில், 07.12.2024-ம் தேதி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் M. மனோகர் இ.கா.ப அவர்கள் மாவட்ட ஆயுதப்படையினை பார்வையிட்டு, காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை வழங்கினார்கள். மேலும், காவல்துறை துணைத் தலைவர் அவர்கள், ஆயுதப்படை காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை ஆய்வு செய்துவிட்டு, காவல்துறையினரின் வாகனங்களைத் தணிக்கை செய்தார். இதன் தொடர்ச்சியாக, ரோந்து இரு சக்கர வாகனங்களையும் ஆய்வு செய்தார்.




அதன் பின்னர், மோப்பநாய்ப் படை பிரிவு, ஆயுத கிடங்கு மற்றும் ஆயுதப்படை அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் த. விஜயராகவன் (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் அருள்முருகன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் இளங்கிள்ளி வளவன் மற்றும் காவல்துறையினர் அனைவரும் கலந்து கொண்டனர்.