விழுப்புரம் நகரத்தில் 12.06.2025 அன்று இரவு நடந்த ATM கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் ஐந்து பேரை, விழுப்புரம் போலீசார் 24 மணி நேரத்துக்குள் பெங்களூரில் அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.

ரெட்டியார்மில், எம்.ஜி. ரோடு, மாம்பழப்பட்டு ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ATM மெஷின்களில் பணம் வெளியே வரும் இடத்தில் அலுமினிய தகடு வைக்கப்பட்டு நூதன முறையில் பணம் திருடப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு P.சரவணன் IPS அவர்களின் உத்தரவின்படி, உதவி காவல் கண்காணிப்பாளர் திரு ரவீந்திரகுமார் குப்தா IPS அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நகர காவல் ஆய்வாளர் திருமதி சித்ரா, உதவி ஆய்வாளர் திரு ராஜேஷ், தனிப்படை உதவி ஆய்வாளர் திரு லியோசார்லஸ் ஆகியோரின் தலைமையில் விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.


கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகநபர்கள் சென்ற வழிகளை பின்தொடர்ந்து, அவர்கள் பெங்களூரில் மறைந்திருப்பது தெரியவந்தது.

விமானம் மூலம் சென்னை வந்து, திருவல்லிகேணியில் தங்கி, நான்கு சக்கர வாகனம் வாடகைக்கு எடுத்து விழுப்புரம் வந்து குற்றம் நிகழ்த்தியதும், அதன் பிறகு பெங்களூருக்கு தொடர்வண்டி மூலம் சென்றதுமான விவரங்களும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

கைதானோர் விவரம்:

1. சோனு (23), மனோஜ்குமார், ஹிராப்பூர், முஸ்டாகி மாவட்டம், உ.பி.


2. சஞ்சய் குமார் (23), அஷர்பிலால், தேவ்கலி, மல்னுபூர், உ.பி.


3. சிவா (27), ராஜ்குமார், ஷாகுராபாத், கஸ்பா மாவட்டம், உ.பி.


4. லவ்குஷ் (25), ஜக்தர், ஹிராப்பூர், முஸ்டாகி மாவட்டம், உ.பி.



கொள்ளையர்களிடம் இருந்து ₹10,200 ரொக்கம், 4 செல்போன்கள், மற்றும் 4 ATM கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இவர்களுக்கு எதிராக பெங்களூரும், உத்திரப்பிரதேசத்திலும் ATM கொள்ளை தொடர்பான வழக்குகள் நிலுவையிலுள்ளது.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசார் குழுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினர்.