குடியரசு தினத்தையொட்டி 2025 ஜனவரி 26 அன்று நடைபெற்ற விழாவில், தேனி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக கம்பம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, இன்று (28.01.2025) காலை 11 மணி அளவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் அவர்கள் கம்பம் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று பாராட்டுத் தெரிவித்தார்.
கம்பம் காவல் நிலையத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்காக உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன், கம்பம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் காவல் துறை உறுப்பினர்களை சந்தித்து, அவர்கள் காட்டிய முயற்சிக்காக வாழ்த்துகளைப் பகிர்ந்தார்.


சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பில் சிறந்து விளங்கியும், அரசு ஆவணங்களை முறையாக கையாள்வதின் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தியதற்காக இந்த பாராட்டைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட மக்களின் சார்பாக தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.