கர்நாடக மாநிலம் மைசூரில் அமைந்த சாமுண்டி விஹார் மைதானத்தில் கடந்த ஏப்ரல் 21 முதல் 23 வரை நடைபெற்ற Veteran Athletic Federation of India நடத்தும் 44-வது தேசிய தடகள போட்டியில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த காவல் துறையினர் சிறப்பான சாதனைகளை படைத்தனர்.

கோட்டார் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் திலீபன் அவர்கள்,

  • உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் இடம்,
  • நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடம்,
  • Triple Jump போட்டியில் மூன்றாம் இடம் என மும்முயற்சியால் பதக்கங்களை கைப்பற்றினார்.

அதேபோல், மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் தலைமை காவலர் டேவிட் ஜான் அவர்கள், 5000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று மாவட்டத்தின் பெருமையை உயர்த்தினார்.

இந்த வெற்றிகளை பாராட்டும் வகையில், இன்று (24.04.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா. ஸ்டாலின் இ.கா.ப., அவர்கள், வெற்றி பெற்ற இருவரையும் நேரில் சந்தித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.