2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி, சென்னை பெருநகர காவலில் பணியாற்றி ஓய்வு பெறும் 6 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 7 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், மொத்தம் 13 காவல் அலுவலர்கள், பாராட்டி பணி நிறைவு விழாவை கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்வு, வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்றது. இதில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் கபில் கமார் சி.சரட்கர், இ.கா.ப., அவர்கள், 13 காவல் அலுவலர்களை 25 முதல் 39 ஆண்டுகள் வரை சிறப்பாக பணிபுரிந்ததற்காக பாராட்டி, அவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.

கூடுதல் காவல் ஆணையாளர் அவர்கள், ஓய்வு பெறும் காவல் அலுவலர்களின் குடும்பங்களுக்கு காவல்துறைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக நன்றி கூறி, அவர்களுக்கு உடல் நலம் மற்றும் குடும்ப பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த விழாவில், காவல் துணை ஆணையாளர்கள் S.மேக்லினா ஐடன் (தலைமையிடம்) மற்றும் K.அதிவீரபாண்டியன் (நிர்வாகம்) மற்றும் ஓய்வு பெறும் காவல் அலுவலர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.