நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் சிவன் கோவில் மைதானத்தில் கடந்த 23,12,2023 உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இயற்கை விவசாயத்தை காக்கும் வகையில் பாரம்பரிய வீர சிலம்பக் கழகத்தின் சார்பில் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 2 மணி நேரம் 23 நிமிடங்கள் இடைவிடாது சிலம்பம் சுழற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய சாதனைப் படைத்த மாணவர்களை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்கள் நேரில் அழைத்து சால்வை அணிவித்து கௌரவித்தார்கள்.