கரூர் மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாகவும், கரூர் மாவட்ட காவல்துறை சார்பாகவும், மது அருந்துதலுக்கும், போதைப்பொருள் பயன்பாட்டுக்கும் எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (28.01.2025) சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் மீ. தங்கவேல், இ.ஆ.ப., மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ் கான் அப்துல்லா, I.P.S., ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணிக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கும் தொடக்குவைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கலால் அலுவலர் கருணாகரன் மற்றும் கரூர் நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதின் அபாயங்கள் மற்றும் போதைப்பொருளின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.