மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.ஸ்டாலின்.இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடி பொதுமக்களுக்கு பல்வேறு குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, திருட்டு குற்றங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு, இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளானது பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று 13.02.2025ம் தேதி மயிலாடுதுறை பூம்புகார் பகுதியில் அமைந்துள்ள பூம்புகார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் பங்கு பெற்ற பேச்சுப்போட்டி மாவட்ட காவல் துறையின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த பேச்சுப்போட்டியில் பூம்புகார் கல்லூரி (MSc (CS) – 2nd Year), श्री (ВА Tamil 3rd Year), L (BCA 3rd Year), ឈុំ (BCA 2nd Year), L (MA(Philosophy) 2nd Year), L (B.Com – 2nd Year) ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று பல்வேறு தலைப்புகளில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.ஸ்டாலின்.இ.கா.ப., அவர்கள் சிறப்புரை ஆற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1. பெண் கல்வியின் முக்கியத்துவம், 2. POCSO வழக்கின் படியான குற்றங்கள் மற்றும் தண்டனைகள், 3. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தண்டனைகள், 4. படிக்கும் வயதில் பாலியல் தொடர்பான செயல்களில் ஈடுபடாமல் உறுதியாக இருத்தல் 5. மயிலாடுதுறை மாவட்டத்தில் பதிவான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அவை நடைபெற்ற விதம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், சட்ட நடவடிக்கைகள், 6. பாலியல் ரீதியான இடையூறுகளிலிருந்து தற்காத்துகொள்ளுதல், 7. “காவல் உதவி” செயலிகளின் இயக்கம் மற்றும் பயன்கள் 8. சமூக வலைதளங்களை கையாளும் விதம் ஆகியவைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடல் மேற்கொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தும், காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வழிமுறைகளை எடுத்துரைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார், சீர்காழி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜ்குமார் மற்றும் பூம்புகார் காவல் ஆய்வாளர் திருமதி. விஜயா ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரைகள் ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் பூம்புகார் கல்லூரியின் முதல்வர் திரு.சிவசக்தி மற்றும் 350 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.