தென்காசி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டையூர் பகுதியில், சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சார்பு ஆய்வாளர் பட்டு ராஜா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது, கோட்டையூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த மகேஷ் (வயது 45), என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சுமார் 5 கிலோ எடையிலான, ரூ.3,000 மதிப்புடைய புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மகேஷ் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர், அவரை நீதிமன்ற காவலில் அடைத்து சிறையில் அடைத்தனர்.
இவ்வகை நடவடிக்கைகள் தொடரும் என்றும், மக்கள் ஒத்துழைப்புடன் புகையிலை விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.