ராஜபாளையம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக (DSP) பி. பஸிணாபீவி (மே 28) தனது பதவியை ஏற்கை நிறைவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விரோத செயல்களை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக உறுதியளித்தார்.
2020-ஆம் ஆண்டு நேரடி டிஎஸ்பி தேர்வில் தேர்வாகிய பஸிணாபீவி, கோவையில் முதற்கட்ட பணியாற்றியதைத் தொடர்ந்து தற்போது ராஜபாளையத்தில் தனது புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
“இங்கு உள்ள பிரச்சனைகள் குறித்து முதலில் முழுமையான ஆய்வு மேற்கொண்டு, உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று, தீவிரமாக பணியில் ஈடுபடவுள்ளேன். சமூக விரோத செயல்கள், அரசு தடை செய்த போதைப் பொருட்கள் விற்பனை, மற்றும் சட்டவிரோத லாட்டரி விற்பனையை முற்றிலும் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்கள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்களுக்கான பிரச்சனைகளை நேரடியாக காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம். யாரும் சிபாரிசுடன் வரத் தேவையில்லை; ஒவ்வொரு புகாரும் உரிய முறையில் விசாரிக்கப்படும் எனவும் புதிய டிஎஸ்பி உறுதியளித்தார்.
சமூக விரோத செயல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – ராஜபாளையம் புதிய டிஎஸ்பி பஸிணாபீவி உறுதி
