ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் தலைமை காவலர் திருமதி. சைலா அவர்களின் மகன் முகில்வர்ஷன்(9ம் வகுப்பு) சிறப்பாக பங்கேற்று தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இதனை முன்னிட்டு, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.அரவிந்த் அவர்கள், முகில்வர்ஷனை பொன்னாடை அணிவித்து பாராட்டி, தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை பெற வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்த சிறப்பு சாதனைக்காக முகில்வர்ஷனை அவரது பள்ளி, குடும்பத்தினர், காவல் துறையினர் மற்றும் நண்பர்கள் பாராட்டினர்.