தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான சட்டம் சார்ந்த முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் உதவி அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பங்கேற்று, குற்றவியல் வழக்குகளின் நடத்தை, குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதற்கான காரணங்கள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைகளை தவிர்க்கும் வழிகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.



மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் நடந்த முக்கிய குற்ற வழக்குகளில் தீவிரமாக வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த காவல் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியதற்காக அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.