திருநெல்வேலி: தொலைந்த 104 கைப்பேசிகள் மீட்பு – மொத்த மதிப்பு ரூ.17,13,896/-

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் அவர்களின் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P.P. முருகன் அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் V. ரமா அவர்களின் தலைமையில், தொலைந்த செல்போன்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த முயற்சியின் போது, 104 தொலைபேசிகள் கண்டறியப்பட்டு, இன்று (24.01.2025) திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட கைப்பேசிகளின் மொத்த மதிப்பு ரூ.17,13,896/- ஆகும்.

CEIR – Central Equipment Identity Register:
தொலைந்த (அ) தவறவிட்ட செல்போன்களுக்கான புகார்களை பதிவு செய்வதற்காக CEIR (https://www.ceir.gov.in/) எனும் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க வேண்டிய நடைமுறை:

  1. புகார்தாரர்கள் தனது தொலைந்த செல்போன் விவரங்களை CEIR இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம்.
  2. புகாரின் அடிப்படையில், தொலைந்த செல்போன் வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாத வகையில் தடைசெய்யப்படும் (Block).
  3. புகார்தாரரின் செல்போனில் புதிதாக சிம்கார்டு பயன்படுத்தப்பட்டால், அதற்கான தகவல் உடனடியாக அவருக்கு அறிவிக்கப்படும்.

விழிப்புணர்வு நடவடிக்கை:
தொலைந்த செல்போன்கள் பல்வேறு குற்றங்களில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தொலைந்த (அ) தவறவிட்ட செல்போன்கள் குறித்து உடனடியாக புகார் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சைபர் குற்றங்களைப் புகாரளிக்க:

  • 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
  • https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் புகார் அளிக்கலாம்.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை, தொலைந்த செல்போன்கள் மீட்பு மற்றும் சைபர் குற்றங்களை தடுக்கும் முயற்சியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. என்றும் உங்கள் பாதுகாப்பிற்காக!